டைக்கானல் - நமக்குத் தெரிந்தவரை ஒரு குளிர்ப் பிரதேசம். அதற்கு மேல் நாம் அதைப் பற்றி யோசித்திருக்க வாய்ப்பில்லை. என்றாவது கொடைக்கானலின் வரலாற்றைப் பற்றி நாம் யோசித்திருக்கிறோமா? கொடைக்கானல் என்னும் இந்த மலைக் கிராமத்தைக் கண்டறிந்தது யார்? இன்று தமிழகத்தின் சொர்க்கமாகத் திகழும் கொடைக்கானலின் உருவாக்கத்திற்குப் பின்னணியில் உள்ளவர்கள் யாவர்? பழனி மலைகளின் சிகரத்திற்கு மேலே இப்படி ஒரு நகரத்தை யார் அமைத்தார்கள்? எப்படி அமைத்தார்கள்? எப்படி அங்கே சென்றார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களோடு கொடைக்கானலின் நூறாண்டு வரலாற்றை நாம் இந்தப் புத்தகத்தில் அறியலாம். 1845 தொடங்கி 1945 வரை கொடைக்கானல் சந்தித்த மாற்றங்கள், அதன் முன்னேற்றங்கள், அதன் உருவாக்கத்திற்குப் பங்களித்தவர்கள், அவர்களுக்கு ஏற்பட்ட தடங்கல்கள் என நாம் அறியாத பல புதிய, அரிய தகவல்களுடன், கொடைக்கானலின் விரிவான வரலாற்றை அதன் பசுமையோடும் குளிர்ச்சியோடும் இந்தப் புத்தகம் பதிவு செய்கிறது. மொழிபெயர்ப்பாளர் வானதியின் எளிமையான தமிழ் நம்மைக் கட்டிப் போடுகிறது. வரலாற்றை ஏன் பதிவு செய்யவேண்டும் என்பதற்கு இந்த நூல் உதாரணமாக விளங்குகிறது.
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno







