எழுத்தாளர் இ.தியாகலிங்கத்தின் விகாரம் என்கின்ற இந்தச் சிறுகதைத் தொகுதி தானம் பிக்குணி அடக்கம் அண்ணன்? உயிர்ப்பு ஞாயிறு கொல்லும் கனவு குறிச்சி என்பது? கிளிக் N2O வாடிய மனது... பால்புது விகாரம் அதளி பொறுத்தல் இறுதி தரிசனம் சந்ததித்தப்பு அப்பாவின் நண்பர்கள் ஆண்கள் அழக்கூடாதா? ஆத்ம திருப்தி மாறா வெடுக்கு மெது(ளடழற) மூத்திர வண்டி புதிதாய் பிறந்த நாணம் மணலின் நிறம் கல்வெட்டு உருகும் உணர்வுகள் யார்? பிசகிய சுருதி என்பதான 26 ஆழமான அழகிய நுணுக்கமான கருத்துக்களை உற்று நோக்கும் சிறுகதைகளால் நிரம்பி உள்ளது. அதிலும் பல கதைகள் புலத்தின் அவலங்களையும் அவதிகளையும் சித்தரிக்கும் விதம் புதுமையாக இரசனையாகப் படிப்பினையா அமைந்துள்ளது. பனிதேசத்து அவரது அழகியல் மலைக்க வைப்பதாக இருக்கிறது. புலம்பெயர் தேசத்திலிருந்து வெளிவந்த மிகவும் உன்னதமான சிறுகதைத் தொகுதியாக இதைப் பார்க்கலாம்.
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno







